2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாலைமரக் குற்றிகளை கடத்தியவருக்கு தண்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி 66 ஆயிரத்து 337 ரூபா பெறுமதியான பாலைமரக் குற்றிகளைக் கடத்திச் சென்றவருக்கு 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை (16) தீர்ப்பளித்தார்.

பூநகரி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மேற்படி மரக்குற்றிகளை கடத்திச் சென்றுகொண்டிருக்கையில் வீதிக் கடமையிலீடுபட்ட பொலிஸார் கடந்த வாரம் மேற்படி நபரை கைது செய்திருந்தனர். தொடர்ந்து, குறித்த நபருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளி தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதினை அடுத்து, நீதவான் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X