2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார்  கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு,  திங்கட்கிழமை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும் எதிர்வரும்  16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

அத்துடன், மேற்படி  மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் கடற்படை மூலமாக பாதுகாப்பதற்கு  நடவடிக்கை எடுக்குமாறும்  கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான்  உத்தரவிட்டார்.

07 படகுகளில் வந்த மேற்படி 29 மீனவர்களையும்  சனிக்கிழமை (31)  இரவு தலைமன்னார் கடற்பரப்பில்  கடற்படையினர் கைதுசெய்தனர்.
படகுகளுடன்  மேற்படி மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு  கொண்டுசெல்லப்பட்டனர்.

இதன் பின்னர், மேற்படி 29 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்களின்  படகுகளில் காணப்பட்ட  வலைகளும்  திங்கட்கிழமை (2) கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர்; ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X