2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வன்னியாராச்சியின் வழக்குக்குத் திகதி

Thipaan   / 2017 மே 31 , பி.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான தினமாக, ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதியை, கொழும்பு நீதவான் நீதிமன்றம், நேற்று (31) குறித்தது.   

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சொத்து விவரங்களை வெளியிடாமை தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்கள் தொடர்பில் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில், எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்கண்ட திகதி குறிக்கப்பட்டதுடன், 1ஆம் 2ஆம் சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை பிறப்பித்தும் நீதவான் உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .