2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சஸூலோவிடம் தோற்ற லேஸியோ

Shanmugan Murugavel   / 2021 மே 24 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், சஸூலோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லேஸியோவுக்குமிடையிலான போட்டியில், 0-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது.

சஸூலோ சார்பாக, ஜியோர்கொஸ் கிரியகொபெளலஸ், டொமெனிக்கோ பெரர்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஹெலாஸ் வெரோனாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. நாப்போலி சார்பாக, அமிர் றரஹ்மனியும், வெரோனா சார்பாக டேவிடே பரோனியும் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இப்ஸியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், றோமாவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. றோமா சார்பாக, ஸ்டீபன் எல் ஷராவி, ஹென்றிக் மிகித்திரயான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்ஸியா சார்பாக, டேனியலி வேர்டி, டொம்மஸோ பொப்கியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் வென்றிருந்தது. ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பிராங்க் கெஸி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X