2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்டர் மிலனிலிருந்து விலகிய கொன்டே

Shanmugan Murugavel   / 2021 மே 27 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் முகாமையாளர் பதவியிலிருந்து அந்தோனியோ கொன்டே விலகியுள்ளார்.

இரண்டாண்டுகள் பதவியிலிருந்த கொன்டே, தனது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியோருடன் கொன்டேயுடன் இணைத்து அண்மையில் கருத்துகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்டரிலிருந்து கொன்டே விலகும் முடிவானது இன்டராலும், கொன்டேயாலும் எடுக்கப்பட்டதாக இன்டர் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .