2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அறைக்கு செல்லாததால் ஒதுக்குகின்றனர்: பொங்கும் கங்கனா

Editorial   / 2023 மார்ச் 01 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஹீரோக்களின் அறைகளுக்குச் செல்வதில்லை. கிசுகிசுக்களில் சிக்குவதில்லை. இதனால் என்னை பாலிவுட்டில் ஒதுக்கிறார்கள்' என்று பாலிவுட் கங்கனா ரனாவத் பொங்கியிருக்கிறார்.

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக துணிச்சலாக சாடினார். தற்போது ஹீரோக்கள் மீது புகார் தெரிவித்து இருக்கிறார்.

டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கங்கனா ரணாவத் கூறும்போதுஇ 'நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று எனது தாயார் கற்றுக்கொடுத்து இருக்கிறார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள்.

நான் மற்ற பெண்கள்போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. எனது தாயார் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதனால்தான் நான் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை. மற்றவர்களைப்போல் ஹீரோக்கள் அறைகளுக்கு செல்வது இல்லை. இதனால் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்'' என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .