2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- நாகலகம் வீதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள போதை வர்த்தகர்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுள் கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த பிரபல போதை வர்த்தகர் ஒருவரும், அவரது சகாக்களும் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X