பொரளை துப்பாக்கிச் சூடு: மற்றொருவர் மரணம்

2011-02-23 11.50pm


பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணித்துள்ளார். மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. முந்திய செய்தி பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் டி56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்