2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு...

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வருடாந்த மஹோற்சவத்துக்காக கொடிச்சீலை வடிவமைப்பவர்களிடம் காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு, இன்றுக்காலை (03) நடைபெற்றது.

மாட்டுவண்டில் மூலம் நல்லூரில் இருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (படங்களும் தகவலும் என்.ராஜ், எம்.றொசாந்த்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .