2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 18

Editorial   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1025: போலசுலாவ் சுரோப்றி, போலந்தின் முதலாவது மன்னராக முடிசூடினார்.

1797: நியுவியெட் என்ற இடத்தில், பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.

1835: அவுஸ்திரேலியாவில், மெல்பேர்ன் நகரம் அமைக்கப்பட்டது.

1864: ரஷ்யா - ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர், டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880: மிசூரியில் வீசிய புயல் காற்றினால், 99 பேர் உயிரிழந்தனர்.

1897: கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902: குவாத்தமாலாவில், 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800–2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நகரத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909: ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை, பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912: கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலிலிருந்து உயிர்ப்பிழைத்த 705 பேர், நியூயோர்க் அடைந்தனர்.

1930: பிபிசி வானொலி, தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது.

1942: இரண்டாம் உலகப் போர் - ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது, அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946: அனைத்துலக நீதிமன்றம், முதற்றடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949: அயர்லாந்துக் குடியரசுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954: ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955: 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு, இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1958: இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.

1980: சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ரொபர்ட் முகாபே பிரதமரானார்.

1983: லெபனானில் பெய்ரூட் நகரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993: பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996: லெபனானில் ஐ.நா கட்டடம் ஒன்றின் மீது, இஸ்ரேலினால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007: பாக்தாத் நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .