2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொள்ளுப்பிட்டி விருந்து; இரண்டு வெளிநாட்டவர் உள்ளிட்ட 09 பேர் கைது

J.A. George   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பின் மேல் தளத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஒன்றுகூடியதுடன், விருந்துபசாரத்தை நடத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளதாக அவர் கூறினார்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .