2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் 30 வருட சேவை மேம்பாட்டு நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் 30 வருட சேவை மேம்பாட்டினை கொண்டாடும் முகமாக 'எமது சுற்றாடலை பாதுகாக்க ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு கிழக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் தலைமையில் சம்மாந்துறை பத்ர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் அப்துல் மஜீத் மண்டபத்திலும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை பத்ர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் விசேட தூஆப் பிரார்த்தனையும் அதனைத் தொடந்து அப்துல் மஜீத் மண்டபத்தில் கட்டார் பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகளுக்கான பீடாதிபதி பேராசிரியர் டீன் முகம்மட்டினால் 'இஸ்லாமும் சுற்றாடலும்' என்னும் தலைப்பில் விசேட சொற்பொழிவும் நடைபெற்றது.

அதிதிகளாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் ஜே.எம்.இந்திரரட்ன, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், கட்டார் பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகளுக்கான பீடாதிபதி பேராசியர் டீன் முகம்மட் ஆகியோருடன் பிரதேச செயலாளர்கள், உலமாக்கள், கல்விமான்கள், அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் பொதுமக்களும்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • meenavn Tuesday, 16 August 2011 04:14 PM

    காலத்தின் தேவை, பேராசிரியர் உரையினை முழுமையாகக பிரசுரிக்க வேண்டுகிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7