2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

திருக்கோவிலில் 'அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய' 9 பேர் கைது

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
திருக்கோவிலில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலும் மற்றும் வீதிகளிலும்  ரயர் எரிப்பு போன்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர் இருவர் உட்பட 9 பேரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்

 

கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்த போது பொலிஸார் அவர்களை பொதுமக்களிடமிருந்து மீட்டனர்.

இதனையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தபோது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் பொலிஸார் துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தையடுத்து பொதுமக்கள் வீதிகளில் ரயர்கள் எரித்து ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்களான அமிர்தலிங்கம், சந்திரகுமார் மற்றும் சம்பவத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பிய பரணீதரன் உட்பட 9 பேரை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்

இச்சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7