2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

1 கிலோ கிராம் இரும்பை உண்ட நபர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் 1 கிலோகிராம் இரும்பை உண்ட சம்பவம்  ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் இடம்பெற்றுள்ளது. தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட  குறித்த நபர்  மருத்துவரை நாடிய போது  அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவரது வயிற்றில், இரும்பு ஆணிகள், திருகுகள் போன்ற ஏராளமான இரும்புப் பொருட்கள்  இருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து நோயாளியிடம் கேட்டபோது ” மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட, இரும்பினை விழுங்க ஆரம்பித்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சையில்  சுமார் ஒரு கிலோ இரும்புப் பொருட்கள்  அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .