2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

3 மணி நேரம் கழிவறையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவருக்கு நடுவானில் கொரோனாத் தொற்றுப்  பாதிப்பு உறுதியானதை அடுத்து, அவர் 3 மணி நேரம் கழிவறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சிகாகோவில் இருந்து ஐஸ்லாந்து சென்ற விமானத்திலேயே தனது குடும்பத்தினருடன் பயணித்த மரிசா ஃபோட்டியோ என்ற குறித்த பெண்ணுக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில், மரிசாவிற்கு தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால், தான் வைத்திருந்த ரேபிட் கிட் மூலம் பரிசோதித்து பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து விமானப் பணிப்பெண்ணிடம் தகவல் தெரிவித்து, தான் இருக்க தனி இருக்கை கேட்டுள்ளதாகவும் எனினும் இருக்கைகள் நிரம்பியிருந்ததால் பயணிகளின் நலம் கருதி அவர் கழிவறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயணம் மேற்கொள்ளும் முன் இரு  பிசிஆர் பரிசோதனைகளையும், 5 ரபிட் பரிசோதனைகளையும் மரிசா மேற்கொண்டதாகவும் இதன்போது அவருக்கு கொவிட்  நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .