2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அகதிகள் படகு மூழ்கல்: ‘57 பேர் இறந்ததாக அச்சம்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் அகதிகளைக் காவிச் சென்ற படகு மூழ்கியதில், குறைந்தது 57 பேர் இறந்ததாகக் கருதப்படுவதாக, புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனத்தின் பேச்சாளர் சஃபா மெஷெலி தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையோர நகரமான குஹும்ஸிலிருந்து நேற்று முன்தினம் படகு புறப்பட்டதாக மெஷெலி மேலும் குறிப்பிட்ட நிலையில், படகில் குறைந்தது 75 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த 18 பேர் மீட்கப்பட்டதுடன், கரைக்கு நேற்று முன்தினம் திரும்பியதாக மெஷெலி தெரிவித்துள்ளார்.

இயந்திரக் கோளாறு ஒன்று காரணமாக படகு நின்றதாகவும், மோசமான வானிலைக்கு மத்தியில் கவிழ்ந்ததாக தப்பித்த நைஜீரியா, கானா, காம்பியாவைச் சேர்ந்தோர் தெரிவித்ததாக மெஷெலி கூறியுள்ளார்.

தவிர, குறைந்தது இரண்டு சிறுவர்களும், 20 பெண்களும் உள்ளடங்குவதாக மீனவர்களால் கரைக்கு கொண்டுவரப்பட்ட தப்பித்தவர்கள் தெரிவித்ததாக மெஷெலி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X