2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து; சோகத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் கடந்த 2017-ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த தாக்குதல் காரணமாக சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் பங்களாதேஷில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி தென் கிழக்கு பங்கலாதேஷில் உள்ள ரோஹிங்கிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கணக்கான மூங்கில்களால் ஆன வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்ஸ் பஜாரின் 16-ஆவது முகாமிலேயே இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தீவிபத்தினால் சுமார் 5000 அகதிகள் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இத்தீவிபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .