2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடப்பட்டதா?

Editorial   / 2021 ஜூலை 11 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலிபான் ஆதிக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் பாதுகாப்பு நிலை மோசமடைந்து வரும் நிலையில் கந்தகாரில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி சரியானது அல்ல. இன்னும் தூதரகம் செயல்பட்டு வருகிறது என தூதரக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பாதுகாப்பு காரணமாக சில ஸ்டாஃப்கள் வெளியேறிவிட்டதாகவும், அவசர தேவைக்காக மட்டும் தூதரகம் செயல்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
 
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன்பிறகு அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X