2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆற்றை தூய்மைப்படுத்திய 11 மாணவர்கள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியாவில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 21 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாவா மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு ஆற்றை சுத்தப்படுத்தும் பணிக்கு 150 மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஒரு மாணவன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்து விட, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த அடுத்தடுத்த மாணவர்கள் என மொத்தம் 21 மாணவர்கள் ஆற்றில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களில் 10 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய   மாணவர்கள் பரிதாபகரமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .