2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஈகுவடார் சிறைக் கலவரம்: 116 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈகுவடார் ( Ecuador ) நாட்டின்  கயாகுயில் (Guayaquil) நகரிலுள்ள சிறைச்சாலையொன்றில் நேற்று முன்தினம் (28)  இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

இக்கலவரத்தில் பலர் தலை துண்டிக்கப்பட்டும்,  துப்பாக்கியால் சுடப்பட்டும்  கொல்லப்பட்டனர். இதனையடுத்து  பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து அக்கலவரத்தை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.



இந்நிலையில் இக்கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாகவும்,  52 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் பலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது எனவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X