2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘ஐ. அமெரிக்க படைகள் மீது ட்ரோன் தாக்குதல்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 24 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கப் படைகளைக் கொண்டுள்ள இராணுவத் தளம் ஒன்று றொக்கெட் தாக்குதல் ஒன்றால் தாக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் அரைச் சுயாட்சி குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான இர்பிலுக்கு 70 கிலோ மீற்றர் வடகிழக்காகவுள்ள அல்-ஹைருக்கு அருகேயுள்ள தளமொன்றையே தாக்குதல் இலக்கு வைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஆளில்லாத ட்ரோன், குர்திஷ்தானிலுள்ள கூட்டணியின் தளம் ஒன்றை நேற்று அதிகாலையில் தாக்கியதாக அறிக்கை ஒன்றில் கூட்டணியின் பேச்சாளர் கேணல் வெய்ன் மரோட்டோ இன்று தெரிவித்துள்ளார்.

தவிர, தாக்குதலால் எதுவித உயிரிழப்புகளோ, சேதமோ ஏற்படவில்லை என மரோட்டோ கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X