2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐரோப்பிய வெள்ளங்கள்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180ஆக அதிகரிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி, பெல்ஜிய உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வெள்ளங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 180ஆக நேற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியில் 156 பேர் உயிரிழந்ததுடன், பெல்ஜியத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நெதர்லாந்து, சுவிற்ஸர்லாந்து, ஒஸ்திரியா,லக்ஸம்பேர்க் உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை என்ற நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளங்கள் வடிய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X