2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஒமிக்ரோன் தொற்றினால் நன்மை? ஆய்வில் வெளிவந்த ஆச்சரியமான தகவல்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்ஆபிரிக்காவில் ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்ஆபிரிக்காவில் கொரோனாத்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர்   ஒமிக்ரோனினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரிடையேயும் அண்மையில்  ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

குறித்த ஆய்வில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடையே இருந்து இரத்த மாதிரிகளை எடுக்கப்பட்டுப்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்ஆய்வின் முடிவில் அவர்களுக்கு டெல்டா வைரஸையும், ஒமிக்ரோன் வைரஸையும் எதிர்க்கும் சக்தி அதிகரித்து காணப்படுகின்றமை  கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உருவாகி இருப்பதாகவும்  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் வல்லமை ஒமிக்ரோனுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X