2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு திடீரென இரத்து

Ilango Bharathy   / 2022 ஜனவரி 24 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இரத்து செய்யப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனாத் தொற்றுப் பரவலானது குறைவடைந்துவருவதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும்  வீரர்கள், அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள  விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .