2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடத்தப்பட்ட 28 சிறுவர்கள் விடுவிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேற்கு நைஜீரியாவிலுள்ள உயர் பாடசாலை ஒன்றிலிருந்து 121 மாணவர்களை இம்மாத ஆரம்பத்தில் கடத்திய துப்பாக்கிதாரிகள் 28 பதின்ம வயதினரை விடுவித்ததாக பாடசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடுனா மாநிலத்திலுள்ள குறித்த பாடசாலையில் இம்மாதம் ஐந்தாம் திகதி புகுந்த தாக்குதலாளிகள், தங்களது விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களைக் கடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இம்மாணவர்கள் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக தெரிவித்த குறித்த அதிகாரி இன்னும் 87 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஐந்து மாணவர்கள் கடந்த புதன்கிழமை தப்பித்தாகவும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் உடல்நிலைக் காரணங்களால் மாணவர் ஒருவரைக் கொள்ளைக்காரர்கள் விடுவித்ததாக இவ்வதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தலையடுத்து குறித்த குழுவானது உணவையும், பணத்தையும் கோரியிருந்த நிலையில், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என சொல்ல முடியாது என இந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .