2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டிடத்தின் மீது விழுந்த விமானம்: 8 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் ஒரு சிறிய விமானம், அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 பேர் உட்பட, 8 நபர்கள் ஒரு சிறிய வகை விமானத்தில் கடந்த 3 ஆம் திகதி பயணித்துள்ளனர்.

அவ்வேளை  விமானம், இத்தாலியில் உள்ள மிலன் புறநகர்ப் பகுதியில் இருக்கும்  அடுக்குமாடி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்தினால் அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்துக்கான காரணம் குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .