2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கணவனைக் கொன்று எலிக்கு விருந்து வைத்த பெண்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 03 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர் தனது கணவனைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி எலிக்கு உணவளித்த கொடூர சம்பவம் ரஷ்யாவில்  இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்து வரும் 37 வயதான மெரினா கோகல் (Marina Kokhal) என்ற பெண்ணே இவ்வாறு தனது கணவர் அலெக்சாண்டர் யுஷ்கோவை கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரப் பாடகரான அலெக்சாண்டர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதனால் அவரைத் தண்டிக்க நினைத்தே இவ்வாறு செய்ததாகவும் மெரினா தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று சர்க்கரை நோயாளியான தனது கணவருக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தைக்  கொடுத்ததாகவும் இதனால் அவர் உயிரிழந்தாகவும் பின்னர் அவரது உடலுடன் உடலுறவு கொண்டதாகவும், அதன் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எலிகளுக்கு உணவளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற  இச்சம்பவத்தின் வழக்கானது தற்போதும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இவ் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மெரினா வீட்டுக் காவலில் இருப்பார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவரது 4 வயது மகனைச் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .