2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனா விடுதியில் தீ: 64 பேர் பலி; 100 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 13 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில் உள்ள கொரோனா வைரஸ் தனிமைப் படுத்தல் விடுதி ஒன்றில் தீயில் குறைந்தது 64 பேர் பலியானதாக, அந்நாட்டு அரச செய்தி முகவரகமான ஐ.என்.ஏ இன்று தெரிவித்துள்ளது.

தென் நகரமான நஸிரியாவில் அமைந்துள்ள அல்-ஹுஸைன் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீயில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவில் பாதுகாப்பு அணிகளால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒட்சிசன் தாங்கிகள் வெடிப்பே தீக்கு பிரதான காரணம் என சுகாதார இயக்குநரகத்துடன் உள்ள மருத்துவ தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட குறித்த விடுதியானது 70 படுக்கைகளைக் கொண்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .