2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தப்பிய பயணிகளால் மூடப்பட்ட விமான நிலையம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 08 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னுக்குள் சட்ட ரீதியற்ற முறையில் அகதிகள் நுழைய முயன்றதாகக் கூறப்பட்டதையடுத்து ஸ்பெய்னின் நெருக்கடியான விமான நிலையமொன்று நான்கு மணித்தியாலங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தது.

மொரோக்கோவின் கஸப்லங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு பயணித்த விமானமானது, விமானத்தில் மருத்துவ அவசரநிலை காரணமாக பல்மா டீ மலோக்ராவுக்குத் திருப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜெட் தரையிறங்கியபோது 21 பயணிகள் ஓடுபாதையைத் தாண்டி ஓடி முன்னரங்கு வேலிக்கு மேலால் தப்பித்துள்ளனர். பின்னர் பொலிஸார் கைதுகளை மேற்கொண்டபோதும், நேற்று முன்தினமும் 12 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .