2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தலிபான்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தஹார்:

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில்   பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தலிபான்களின் சமீபத்திய முடிவுக்கு எதிராக ஆஃப்கான் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்கள் தங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கூடி நகரத்தில் வீதி மறியலில் ஈடுபட்டதாக காமா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முடிவை எடுப்பதற்கு எந்த காரணமும் இதுவரை விளக்கப்படவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

தலிபான்கள், ஓகஸ்ட் 15 அன்று காபூல் நகருக்குள் நுழைந்த பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த மாதம் ஆட்சிக்கு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .