2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தலிபான்களுடன் யுத்த நிறுத்ததுக்கு பாகிஸ்தான் இணக்கம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 10 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானும், உள்ளூர் தலிபான் ஆயுததாரிகளும் ஒரு மாத யுத்த நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளனர் என பாகிஸ்தானின் தகவலமைச்சர் பவாட் செளத்ரி நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு தரப்புகளும் இணங்கினால் யுத்த நிறுத்தமானது நீடிக்கப்படலாம் என செளத்ரி மேலும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலிபானிலிருந்து வேறான பாகிஸ்தான் தலிபான் அல்லது தெஹ்றீக்-ஈ-தலிபான் பாகிஸ்தான் ஆனது, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்திலுள்ள அரசாங்கத்தை அகற்றி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்த ஆண்டுக்கணக்காக முயல்கிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர்களின் உதவியுடன் ஆப்கானிஸ்தானிலேயே இரண்டு தரப்புகளும் சந்தித்துள்ளன.

அந்தவகையில், நேற்று அமுலுக்கு வந்த யுத்த நிறுத்தமானது அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி வரை நீடிக்கவுள்ளதாக தெஹ்ரீக்-ஈ-தலிபான் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X