2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தாக்குதலையடுத்து ஈராக் பிரதமர் பாதுகாப்பாக உள்ளார்’

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 08 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று, கொலை முயற்சி ஒன்றில் ஈராக் பிரதமர் முஸ்தஃபா அல்-கட்ஹிமி காயமில்லாமல் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

பச்சை வலயத்திலுள்ள பிரதம் கட்ஹிமியின் வசிப்பிடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் ஆறு உறுப்பினர் காயமடைந்ததாக பாதுகாப்புத் தகவல் மூலங்கள் றொய்ட்டர்ஸுக்குத் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலுக்கு மூன்று ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்நாட்டமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அரச செய்தி முகவரகமான ஐ.என்.ஏ தெரிவித்துள்ளது.

இதில், இரண்டு இடைமறிக்கப்பட்டு பாதுகாப்புப் படைகளால் வீழ்த்தப்பட்ட நிலையில், மூன்றாவதே பிரதமர் கட்ஹிமியின் வசிப்பிடத்தைத் தாக்கியுள்ளது.

இந்நிலையில், இத்தாக்குதலுக்கு உடனடியாக எக்குழுவும் உரிமை கோரியிருக்கவில்லை.

அரசாங்கப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குமிடையிலான வன்முறையான மோதல்களின் இரண்டு நாள்களிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .