2024 மார்ச் 28, வியாழக்கிழமை

துப்பாக்கிதாரிகளால் சீனப் பணியாளர்கள் கடத்தப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மேற்கு மாலியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் இருந்து மூன்று சீனர்களையும், இரண்டு மூரித்தானியர்களையும் துப்பாக்கிதாரிகள் கடத்தியதாக, மாலியின் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன.

பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தளத்துக்குள் நேற்று நுழைந்த தாக்குதலாளிகள், ஐந்து பிக்கப் ட்ரக்குகளையும், பயணக்கைதிகளையும் கொண்டு சென்றதாக ஆயுதப் படைகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, சீன கட்டுமான நிறுவனமான கொவெக்குக்குச் சொந்தமான உபகரணங்களையும் தாக்குதலாளிகள் அழித்ததாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X