2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொலைபேசிகளை இலக்கு வைத்த இஸ்ரேல் மென்பொருள்?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் உள்ள ஊடகவியலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்குச் சொந்தமான 37 திறன்பேசிகளை வெற்றிகரமாக ஹக் செய்வதற்கு இஸ்ரேலிய நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நேற்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

17 ஊடக நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றிலேயே இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜமால் கஷொக்ஜிக்கு நெருக்கமான இரண்டு பெண்களின் அலைபேசிகளை, அவர் கொல்லப்படுவதற்கு முன்பும், பின்பும் இலக்கு வைப்பதற்கும் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யார் ஹக் செய்ய முயன்றதாக அல்லது ஏனென்று குறித்த விசாரணை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .