2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

படுக்கை விரிப்பால் தனிமைப்படுத்தலிருந்து தப்பல்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுக்கை விரிப்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கயிறு ஒன்றை பயன்படுத்தி நான்காவது மாடி ஹொட்டல் அறையிலிருந்து கீழிறங்கி அவுஸ்திரேலிய தனிமைப்படுத்தலிருந்து நபரொருவர் தப்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறிஸ்பேணிலிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் சென்றிருந்த குறித்த நபர், மேற்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிவிலக்குகளைச் சந்திருக்கவில்லை என மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு அவுஸ்திரேலியாவை விட்டு 48 மணித்தியாலத்துக்குள் வெளியேறுமாறு குறித்த நபருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், அன்றிரவு தனிமைப்படுத்தல் ஹொட்டல் ஒன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அந்தவகையில், நள்ளிரவையடுத்து தப்பித்த குறித்த நபர், நேற்றுக் காலையில் பிடிபட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .