2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற கட்டடத்தில் தீ

Editorial   / 2022 ஜனவரி 02 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் சட்டப் பேரவைத் தலைநகர் கேப்டவுனில் உள்ள பாராளுமன்ற வளாகத்திலேயே  இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறி, வானத்தை நிரப்பும் கரும் புகையை வீடியோ காட்சிகள் காட்டுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

"கூரை தீப்பிடித்துள்ளது மற்றும் தேசிய சட்டமன்ற கட்டிடமும் தீப்பிடித்துள்ளது" என்று நகரின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தீ கட்டுக்குள் வரவில்லை என்றும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .