2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரத்துடன் 3 ஆண்டுகளாகக் குடும்பம் நடத்தி வரும் பெண்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த கேட் கன்னிங்ஹாம் என்பவர், கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் மெர்சிசைடில் உள்ள செஃப்டனில் எல்டர் என்ற மரத்தை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர் இத்திருமணத்தின் பின்னர்  தனது இரண்டாவது பெயரான குடும்பப் பெயரை எல்டர் என்று மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இயற்கை ஆர்வலரான இவர் இது குறித்து பிரபல ஊடகமொன்றுக்கு செவ்வியளிக்கையில் ” சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் காட்டை அழித்தல் போன்ற செயல்களுக்கு எதிராகவே  இம் முடிவைத் தான்   எடுத்ததாகவும் வாரத்திற்கு ஐந்து முறை குறித்த மரத்தை பார்த்துவிட்டு செல்வதாகவும் அம் மரத்திற்கும் தனக்கும் உள்ள உறவு மேலும் வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .