2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மிருகக் காட்சி சாலையில் ஊழியரைக் கடித்த புலி உயிரிழப்பு

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள நேப்பிள்ஸ் மிருக்க காட்சி சாலையில் அண்மையில்  கழிவறைகளை தூய்மை செய்யச் சென்ற ஊழியர் ஒருவர், மனிதர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மலேசியப் புலி ஒன்றுக்கு உணவளிக்க முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞரின் கையை இறுக்கமாகக் கவ்விய புலி, அவரை கூண்டிற்குள் இழுத்துச் சென்று அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிஸார் புலியின் வாயில் இருந்து இளைஞரின் கையை விடுவிக்க முடியாததால், புலியின் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 8 வயதான  அப்புலி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .