2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூவருக்கு புதிய தொற்று உறுதி; அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் 3 பேருக்கு புளோரோனா எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரோன் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் அடையளங்காணப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலேயே முதல் தடவையாக இஸ்ரேலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மெக்சிகோவில் மூன்று பேருக்கு அண்மையில்  புளோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .