2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மொங்கோலியாவில் அணைகள் தகர்ந்தன

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வடமேற்கு பிராந்தியமான மொங்கோலியாவிலுள்ள இரண்டு அணைகள் தகர்ந்துள்ளதாக நீர் அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

பருவகால மழையை அடுத்தே இவ்வாறு அணைகள் தகர்ந்துள்ளன.

நேற்று முன்தினம் பிற்பகலிலேயே இந்த அணைகள் தகர்ந்துள்ளன. இந்த அணைகள் மூலம் 46 மில்லியன் கியூபிக் கொள்ளளவுடைய நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்ததாக நீர் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாழ்நிலப் பகுதியில் உள்ளோர் வெளியேற்றப்பட்டதாகவும், எதுவித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை என குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .