2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஹெய்ட்டியில் கொல்லப்பட்ட படைவீரர் மெய்ப்பாதுகாவலர்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெய்ட்டி பொலிஸாருடனான துப்பாக்கி மோதல் ஒன்றில் கொல்லப்பட்ட கொலம்பியாவின் முன்னாள் படைவீரர், மெய்ப்பாதுகாவலராக பணிக்கமர்த்தப்பட்டதாக அவரது சகோதரி நேற்று தெரிவித்துள்ளார்.

ஹெய்ட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸேயின் கொலையில் பங்கெடுத்ததாக குறித்த படைவீரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மொய்ஸே, 26 கொலம்பியர்கள், இரண்டு ஹெய்ட்டி ஐ. அமெரிக்கர்கள் உள்ளடங்கலான பயிற்றுவிக்கப்பட்ட வெளிநாட்டுக் கொலையாளிகளால் கொல்லப்பட்டதாக ஹெய்ட்டி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதில், 17 பேர் கைப்பற்றப்பட்டதுடன், மூவர் கொல்லப்பட்டதோடு, எண்மரை இன்னும் தேடுவதாக ஹெய்ட்டி பொலிஸார் கூறியிருந்தனர்.

இதேவேளை, தன்னுடனான இறுதிக் கலந்துரையாடலில், எதிர்பாராதவிதமாக தாங்கள் காக்க வேண்டிய நபரிடம் அங்கு மிகவும் தாமதமாகச் சென்றதாக படைவீரர் தெரிவித்ததாக அவரின் சகோதரி கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .