2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிண்ணியா அல்-ஹிறா விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முரட்டுச் சிங்கம் அணி வெற

Kogilavani   / 2011 மே 29 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா அல்-ஹிறா விளையாட்டுக் கழகத்தின் 3 ஆவது வருட நினைவாக நடத்தப்பட்ட 6 ஓவர் 8 பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கிண்ணியா முரட்டுச் சிங்கம் அணி 13 ஓட்டங்களால்  வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டி கிண்ணியா அல்-ஹிறா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் கே.ஜே.கே.ஜகுபர் தலைமையில் இடம்பெற்றது.

20 அணிகள் பங்கு பற்றிய இச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா அல்- கைதா அணியும், முரட்டு சிங்கம் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அல்-கைதா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முரட்டுச் சிங்கம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை  பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து  கொண்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உப செயலாளர் திலகஸ்ரீ, ,  ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், ஆலோசகருமான எம்.பீ.முஹம்மட் ஹில்மி மற்றும் சேருவல தொகுதி அமைப்பாளர் என்.சிஹான், ஜமாஅதே இஸ்லாமி திருமலை பிராந்திய தலைவர் எம்.நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X