2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குழுநிலைப் போட்டிகள்

Suganthini Ratnam   / 2011 மே 30 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மாவட்டங்களுக்கு இடையே குழுநிலைப் போட்டிகளை நடத்தி வருகின்றன.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  வலைப்பந்தாட்ட  இறுதிப் போட்டியில்   திருகோணமலை மாவட்ட அணியினரை எதிர்கெண்ட மட்டக்களப்பு மாவட்ட அணியினர் வெற்றி பெற்று சம்பியனாகினர்.

பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில்  அம்பாறை மாவட்டத்தை எதிர்கொண்ட திருகோணமலை மாவட்ட அணியினர் சம்பியனாகினர். ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் அம்பாறை மாவட்டத்தை எதிர்கொண்ட திருகோணமலை மாவட்ட அணியினர் சம்பியனாகினர்.

பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில்  மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்கொண்ட அம்பாறை மாவட்டம்  7:0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகினர். ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை எதிர்கொண்ட திருகோணமலை  மாவட்டம் 6:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X