2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிகுமார்


கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்திய கால்பந்து போட்டியில் திருகோணமலை மாவட்டம் சம்பியனாகியது. 

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கு இடையே மாகாணநிலை போட்டி திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

ஆண்களுக்கான கால்பந்து, பெண்களுக்கான  கால்பந்து, துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப்போட்டி அம்பாறை மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இடையே நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட அணியினர் 2 : 0 என்ற கோல் கணக்கில் அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொண்டு சம்பியனாகியது.

இறுதிப்போட்டிக்கு திருகோணமலை கால்பந்து லீக் உபதலைவர் சு.ஜெயசங்கர் அதிதியாக கலந்து கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X