2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் யாழ்.மாவட்ட அணிகள் ஆதிக்கம்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேற்படி போட்டிகளில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று 23 ஆம் திகதி முதல் நடைபெற்றது.

15 வயதுப் பிரிவில் முதலிடத்தினை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியும் இரண்டாமிடத்தினை மன்னார் சென்.அன்ரனீஸ் மத்திய மகா வித்தியாலய அணியும் மூன்றாமிடத்தினை சண்டிலிப்பாய் இந்து கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

17 வயதுப்பிரிவில் முதலிடத்தினை அராலி சரஸ்வதி வித்தியாலயமும் இரண்டாமிடத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவில் முதலிடத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் இரண்டாமிடத்தினை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணிகளும் பெற்றுக்கொண்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X