2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பூப்பந்தாட்ட போட்டி முடிவுகள்

Kogilavani   / 2013 ஜூலை 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் பெரு விளையாட்டுப்போட்டிகளில் பூப்பந்தாட்ட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.  

முதலாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவிலும், இரண்டாம் கட்டப்போட்டிகள் யாழ்ப்பாணத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியாவிலும் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்டப் போட்டிகளான பூப்பந்தாட்டம், கரம் மற்றும் டெனிஸ் போட்டிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்றன.

15, 19 வயதுப் பிரிவு ஆண்,பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றன.

15 வயது ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய அணி சம்பயினாகியது. 

இரண்டாமிடத்தினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை மானிப்பாய் இந்து கல்லூரி ஆகிய அணிகளும் பெற்றுக்கொண்டன.

15 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியனாகியது.

இரண்டாமிடத்தினை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணியும் மூன்றாமிடத்தினை பண்டத்தரிப்பு இந்து கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயது ஆண்கள்  பிரிவில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை உடுவில் மான்ஸ் மகா வித்தியாலய அணியும் மூன்றாமிடத்தை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.

19 வயதுப் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

இணர்டாமிடத்தினை உடுவில் மான்ஸ் மகா வித்தியாலய அணியும் மூன்றாமிடத்தினை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X