2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

டென்னிஸ் போட்டியில் சென். ஜோன்ஸ், சுண்டுக்குளி அணிகள் சம்பியன்

A.P.Mathan   / 2013 ஜூலை 02 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்
 
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெரு விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
முதலாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவிலும், இரண்டாம் கட்டப்போட்டிகள் யாழ்ப்பாணத்திலும், மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியாவிலும் நடைபெற்று முடிந்த நிலையில் நான்காம் கட்டப் போட்டிகளான பூப்பந்தாட்டம், கரம் மற்றும் டென்னிஸ் போட்டிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்றன.
 
19 வயதுப்பிரிவு ஆண்கள் பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகள் சென். ஜோன்ஸ் கல்லூரி திடலில் நடைபெற்றது.
 
ஆண்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியதுடன், இண்டாமிடத்தினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.
 
பெண்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி சம்பியனாகியதுடன், இரண்டாமிடத்தினை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணியும், மூன்றாமிடத்தினை வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரி அணியும் பெற்றுக்கொண்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X