2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சென்.மேரிஸ் அணி இறுதிப்போட்டியில்

Kogilavani   / 2013 ஜூலை 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

அரியாலை சனசமூக நிலையம் தமது 64 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நடத்தி வருகின்றது.

மேற்படி சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

அரையிறுதிப்போட்டியில் அனுபவம் மிக்க ஊரெழு றோயல் அணியும், இளம் வீரர்களைக் கொண்ட நாவாந்துறை சென்.மேரிஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் சென்.மேரிஸ் அணி 1:0 என்ற புள்ளிக் கணக்கத்தில் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இறுதி நேரத்தில் சென்.மேரிஸ் அணி மேலும் ஒரு கோல் போட்டது. இறுதியில் சென்.மேரிஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இரண்டாவது அரையிறுதியில் இன்று புதன்கிழமை பாடும்மீன் அணியினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X