
-ரீ.எல்.ஜவ்பர்கான்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கரம் சுற்றுப்போட்டியில் 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நுகேகொட புனித ஜோன் கல்லூரி முதலாமிடத்தையும் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் நுகேகொட மகாமாயா பெண்கள் கல்லூரியும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை மொரட்டுவ பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரியும் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயம் முதலாமிடத்தையும் சுவீகரித்துக்கொண்டதாக கொழும்பு கல்வி வலய விளையாட்டு பிரதி கல்வி பணிப்பாளர் எம்.லலித் பந்துல தெரிவித்தார்.
மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடளாவிய ரீதியில் 91 பாடசாலைகள் பங்குகொண்டிருந்தன.
15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் மூன்றாமிடத்தை கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியும் பெற்றுக்கொண்டதுடன் பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை நுகேகொட சமுத்திராதேவி பெண்கள் உயர்தர பாடசாலையும் மூன்றாமிடத்தை வவுனியா அல் இக்பால் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.
19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியும் மூன்றாமிடத்தை புனித ஜோன்ஸ் கல்லூரியும் பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தை பதுளை விசாகா பெண்கள் உயர்தர பாடசாலையும் மூன்றாமித்தை நுகேகொட மகாமாய பெண்கள் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.