2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மந்தகதியில் பரீட்சை விண்ணப்பங்கள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் 50 சதவீதமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரீட்சைகளுக்காக அதிபர்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் எனினும், அதிபர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அவர்கள் விண்ணப்பங்களை அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி இம்மாதம் 5 ஆம் திகதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .